|
Last Update: 21/Jan/2010 Inscriptions பெரும்புலியூர் கீழமங்கலம் Copper Plates அவல்பூந்துறை Video TV Interviews Expert Opinion New Indian Express Dinamalar (Vaaramalar) Deccan Chronicle Amman Darisanam Panimayam (Tamil) Dinamalar (Tamil) Puthiya Parvai (Tamil) Kalachuvadu (Tamil) Ananda Vikatan (Tamil) Junior Vikatan (Tamil) Thinnai.com |
ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரனும் ப்ரவாஹனும் இணைந்து எழுதியுள்ள தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா? என்ற ஆய்வுக் கட்டுரை சொல்வனம் இதழ் - 16இல் வெளியிடப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் இக்கட்டுரையைப் படித்துப் பயனுற வேண்டுகிறோம். செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, பார்த்திபன், ஆன்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் காட்சிகளுக்கு வசனம் எழுதுவதில் ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இது குறித்த அனுபவங்களை இராமச்சந்திரன் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்வார்.
காலச்சுவடு அக்டோபர் இதழில் வெளிவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "ஆஷ் அடிச்சுவட்டில்" என்ற கட்டுரைக்கான எதிர்வினைகள்: 1. அ. கணேசன் எழுதிய ஆங்கிலேயர் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு. 2. ப்ரவாஹன் எழுதிய எதிரியின் சாவோ இறகைவிட இலேசானதே! எதிர்வினைகளை வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு நன்றி. - - - ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதிய ‘வள்ளுவரும் ஒழுக்கமும்’ என்ற கட்டுரை சொல்வனம் இதழ் 11இல் வெளிவந்துள்ளது. வாசகர்கள் படித்துப் பயனுற வேண்டுகிறோம்.- - -<தொடர்ச்சி> அர்த்த நாரீஸ்வரர் என்றும், பெண்ணமருந் திருமேனி என்றும், ஏழை பங்காளன் என்றும் கற்பனை நயத்துடன் வழங்கப்படுகிற மாதொரு பாகர் வடிவம் முதன்மையான சிவ மூர்த்தங்களுள் ஒன்றாகும்...- - -<தொடர்ச்சி> ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள் என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட உள்ளது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயம் சொல்வனம் இதழ் - 8இல் வெளியிடப்பட்டுள்ளது. SISHRI வாசகர்கள் அனைவரும் சொல்வனம் இணைய இதழைப் படித்துப் பயனுற வேண்டுகிறோம். நாகர்கோவில் அனார்ய சமாஜ் வெளியிட்டுள்ள "திராவிடரும் திராவிட இந்தியாவும்" நூல் குறித்து திரு. அ. கணேசன் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கை ’தமிழ்ஹிந்து’ இணைய தளத்தில் ”திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும் பதிலடியும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது “Every sale, agreement or donation by anyone had to be preceded by a reference to the king to be legally binding. If it were a direct grant from the king, then the inscription would carry the words ‘Konerinmai Kondaan,’ explains epigraphist S. Ramachandran... (Courtesy: Suganthy Krishnamachari / The Hindu, July 17, 2009.) எஸ். இராமச்சந்திரனின் “இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?” ஆய்வுக் கட்டுரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்துகள்.- - - முனைவர் இரா. நாகசாமி எழுதியுள்ள "Ramanuja - Myth and Reality" என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கான எதிர்வினை.- - -<தொடர்ச்சி> - - -இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப் பெயருடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.- - -<தொடர்ச்சி> - - -“யானையின் புறக் கழுத்திலே ஏறிய திருமகள் விளங்குகின்ற இந்திரனும்” என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை, ஐயத்துக்கு இடமற்ற வகையில் திருமகள் இந்திரனுக்குரியவள் என்பதை உணர்த்திவிடுகிறது.- - -<தொடர்ச்சி> - - -நாகராஜா என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் தெய்வத்தை வழிபட்டவர்கள் சமண சமயத்தவராவர். இத்தெய்வத்தின் சிலை கடுசாக்கரை அல்லது நவபாஷாணத்தால் ஆனதென்பதால் இச்சிலைக்கு எந்நேரமும் கவசம் அணிவிக்கப்படுவதாலும், அபிஷேகம் போன்றவை நடைபெறுவதில்லையாதலாலும் இச்சிற்பத்தினை முழுமையாகப் பார்த்தவர்கள் குறைவே.- - -<தொடர்ச்சி> According to S. Ramachandran, retired Senior Epigraphist, Tamil Nadu Archaeology Department, Madurai was called 'Madirai' during the pre-Christian era and up to 10th century A.D. The earliest references to Madurai occurred in the Tamil-Brahmi inscriptions of the second century B.C., found at Mettupatti and Azhagarmalai, near Madurai. Inscriptions in these places refer to a village elder named Visuvan, a goldsmith, a Jain monk and a salt trader as belonging to 'Madirai'. Even Mathura, in present-day Uttar Pradesh, was originally known as Mathira, said Ramachandran. It was from the 10th/11th century A.D. that Madirai came to be called Madurai. (Courtesy: T.S. Subramanian / Frontline, April 11-24, 2009.) |
![]() ![]() |